வியாழன், 12 மார்ச், 2020

தமிழன் வாழ்வு முறை

*தமிழன் வாழ்வு முறை*

*தலைமுறைக்கு ஏற்ற முறை*

கையக் கழுவு என்றாள்
கருவாடு தின்னாதை என்றாள்
பைய நடவென்றாள்
பசித்து உண்ணென்றாள்
நெய் விளக்கு ஏற்றென்றாள்
நெடுநேரம் முழியாதையென்றாள்
மஞ்சள் தெளியென்றாள்
மாட்டுச் சாணத்தில் மெழுகென்றாள்
துளசி வணங்கென்றாள்
தூபமிட சாம்பிராணியென்றாள்
திருநீறு பூசென்றாள்
திருப்பாவை படியென்றாள்
தோய்த்து உடுத்தொன்றாள்
தோளில் சுற்று சால்வையென்றாள்
விரதம் இரு என்றாள்
வெளியில் நடவென்றாள்
மனவழுத்தம் மாசென்றாள்
மங்கை கூந்தலில் மல்லிகை நன்றென்றாள்
குங்குமம் இடு என்றாள்
கோவில் குளம் போ என்றாள்
மரக்கறி உண்ணென்றாள்
மாட்டிறைச்சி வேணாமென்றாள்
மலச்சிக்கல் நோயென்றாள்
மாதமொரு முறை பேதிக்கு குடியென்றாள்
மிளகு ரசம் அமுதென்றாள்
முன்னைநாள் மிச்சம் நஞ்சென்றாள்
கைகூப்பி வணங்கென்றாள்
கையில் படாது மாசென்றாள்
வேப்பிலை தொங்கவிடு என்றாள்
வேப்ங்காத்து விசம் நீக்குமென்றாள்
மாவிலை தோறணம் காப்பென்றாள்
மாலையில் தீபம் ஏற்ரென்றாள்
மஞ்சள் பூசி குளி என்றாள்
கஞ்சல் குப்பை கூட்டு என்றாள்
சுவருக்கு சுண்ணாம்பு அடி என்றாள்
சுவைச்சு சாப்பிடு தாம்பூலம் என்றாள்
பனை மட்டையில் நாக்கு வழியென்றாள்
பல்லு தீட்டு ஆலங்குச்சி என்றாள்
நல்லெண்ணை பூசி குளி என்றாள்
சோப்பு சவுக்காரம் ஒதுக்கென்றாள்
குளிர்பானம் நஞ்சென்றாள்
தெளிந்த மோர் குளிர்ச்சி என்றாள்
வீதிச் சாப்பாடு ஒதுக்கு என்றாள்
வீட்டில் சமைத்து உண் என்றாள்
தமிழன் வாழ்வு முறை
தலைமுறைக்கு ஏற்ற முறை
உன் குலவாசல் வாராது
குலம் கெடுக்கும் நோயின் குறை
உரை
உதயகுமார் காங்கேசன்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...