வியாழன், 28 அக்டோபர், 2021

தூதுவளை மருத்துவ குறிப்பு

 தூதுவளை ஒரு அற்புதமான மூலிகையாகும். தூதுவளை கசப்பு மற்றும் காரச்சுவை உடையது. இருமல், இரைப்பு போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகும். இலை உடலை தேற்றும். பூ உடலை பலப்படுத்தும். பசியைத்தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.

மார்புச்சளி, மார்புவலி ஆகியவற்றை தூதுவளை பழம் குணமாக்கும்.  ஒரு கைப்பிடி தூதுவளை இலைகளை 2 தம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு தம்ளராக வரும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் இரைப்பு இருமல் நோய்கள் தீரும்.

ஒரு கைப்பிடி இலைகளை அதே அளவு வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணையில் வதக்கி துவையலாக்கி சாப்பிட்டு வரலாம். இதே போல் 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பின்னர் 3 நாட்கள் விட்டு அடுத்த 3 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு, இருமல் குணமாகும்.

https://srinidhixerox.live/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...