சனி, 5 ஜூன், 2021

சரம்- அறிந்து கொள்ளவும்

 சரம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளது. ஞான சர நூலிலிருந்து படித்தவற்றை பகிர்ந்துள்ளேன்.

நமது மூச்சுக்காற்றானது வலது இடது நாசிகள் வழியே வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறுவதை கிழமைகளைப் பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது.]

ஞாயிறு, சனி மற்றும் திங்கட்கிழமைகளில் - வலது நாசி வழியே வெளியேற வேண்டும்.

செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் - இடது நாசி வழியே வெளியேற வேண்டும்.

வலது நாசியின் வழியே வெளியேறுவதை பிங்கலை- சூரிய திசை

இடது நாசியின் வழியே வெளியேறுவதை - இடகலை - சந்திரதிசை

வியாழக்கிழமை இரண்டு நாசிகள் வழியே வெளியேற வேண்டும்.

இரண்டு நாசிகள் வழியே வெளியேறுவதை - கழினை -சுழி 

என்று சர நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூச்சுக்காற்றானது ஒரு குறிப்பிட்ட நேர அளவுகளிலேயே அவ்வாறு வெளியேறும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவற்றில் ஏதேனும் மாற்றத்துடன் நிகழ்ந்தால் உடலில் நோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாம்...

இவை அனைத்தும் ஞான சர நூலில் இடம்பெற்றுள்ளது.

அனைவரும் அந்த நூலைப் படித்து பயன்பெறுங்கள்.

மேலும் பல தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...