சனி, 14 செப்டம்பர், 2019

மருத்துவ குறிப்புகள்

திராட்சை பழம் சாப்பிட்டு வர ஈரல் சம்பந்தப்பட்ட நோய் குணமாகும்.

வேப்பம் பூவை வறுத்து பொடித்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
வேப்ப இலை அருகம்புல் கஷாயம் செய்து 100 மில்லி சாப்பிட்டு வர புற்று நோய் குணமாகும்.

கண்டங்கத்திரி வேரை அரைத்து வெள்ளாட்டுப் பாலுடன் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் குணமாகும்.

கற்றாழை வைத்துக் கட்டினால் சிலந்தி கடி குணமாகும்.

தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து லேசாகச் சூடாக்கிச் சாப்பிட இருமல் குணமாகும்.

நாய் கடித்த கடிவாயில் எருக்கன் பால் இரண்டு மூன்று சொட்டு விட நாய்கடி சிஷம் முறியும்.

முளைக்கீரை நரம்புத்தளர்ச்சி வயிற்றுப்புண் போன்ற வியாதிகளை குணமாக்கும்.

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் இழந்த இயற்கை நிறத்தை பெறலாம்.

வயிற்றுப்போக்கு சீதபேதி சிறு நீரகக் கோளாறுகள் ஆகியவைகளுக்கு ஆப்பிள் பழம் நல்லது.

பனங்கிழங்கு பித்த மேகம் அஸ்திசூடு ஆகியவற்றை நன்கு குணமாக்கும்.

கட்டிகள் உடைய எருக்கம் பாலை கட்டிகளின் மேல் தடவினால் உடையும்.

கருவேப்பிலை மஞ்சள் அரைத்து குளித்தால் முகப்பரு, தழும்பு  நீங்கும்.

நெல்லிக்காயை இடித்து சாறுபிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.

மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

முருங்கைக் கீரை சாப்பிட்டு வர கண் நோய் நீங்கும்.

மஞ்சள் வறுத்து கரியானவுடன் பொடியாக்கி சாப்பிட குடல்புண் எதுவானாலும் குணமாகும்.

தினசரி வாழைப்பழம் சாப்பிட குடல்புண் சருமநோயை தடுக்கலாம்.

பூண்டு வெற்றிலையை அரைத்து தேய்த்து குளிக்க தேமல் தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...